சுவிஸ் நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம் : திடுக்கிடும் தகவல்.!!
சுவிஸ் நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை மீறி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
பல்வேறு துறைகள் பணியாளர் பற்றாக்குறைக்கு மத்தியில் தகுதிவாய்ந்த பணியாளர்களை பணியமர்த்த விரும்பினாலும், பல சுவிஸ் நிறுவனங்கள் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பல மாதங்களுக்கு முன்பு UBS Credit Suisse ஐக் கைப்பற்றியபோது ஆயிரக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்தனர்.

மேலும் ரைட்டர் என்றழைக்கப்படும் நிறுவனமும் 900 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மாத்திரமின்றி பயோடெக்னாலஜி நிறுவனமான Idorsia எனப்படும் நிறுவனம் இதுவரையில் 500 பணியாட்களை வேலைநீக்கம் செய்துள்ளதோடு சுவிட்சர்லாந்தின் இன்னுமொரு முக்கிய நிறுவனமான Dormakaba 800 இடங்களையும் பணியாட்களை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனீவாவில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதோடு, கூகுளில் 300க்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





