சென்ட்காலன் மாநிலத்தின் நகரத்தில் பனிப்பொழிவால் ஏற்பட்ட விபத்து.!!

கன்டோன் சென்ட்காலன் மாநிலத்தின் நகரத்தில் வீதியில் பனி படர்ந்திருந்தமையால் 75 வயது நபர் பயணம் செய்த கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
புதன்கிழமை பிற்பகல் (01/18/2023) Speicherstrasse இல் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. 75 வயது மூதாட்டி ஒருவர் நகரத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது, பனி படர்ந்த சாலையில் உள்ள வளைவில் அவரது வாகனம் சறுக்கி கான்கிரீட் சுவரில் மோதியது.

மாலை 5 மணிக்கு முன் போக்குவரத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பனி காரணமாக அவர் பயணித்த கார் இடதுபுறமாக சறுக்கி எதிர்திசையில் கான்கிரீட் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் 75 வயதான அவர் சிறிய காயங்களுக்கு உள்ளானார். 75 வயதான அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்டபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.





