வளர்ச்சி உதவித் தொகை குறைப்புக்கு சுவிஸ் மக்களின் எதிர்ப்பு
வளர்ச்சி உதவித் தொகை குறைப்புக்கு சுவிஸ் மக்களின் எதிர்ப்பு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு வளர்ச்சி உதவிக்கான நிதியை மேலும் குறைப்பதை பெரும்பாலான மக்கள் எதிர்க்கின்றனர் என ETH Zurich மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வின் படி, பதிலளித்தவர்களில் மூன்றில் நான்குபேர் மேற்பட்டோர், வளர்ச்சி உதவிக்கான நிதி குறைக்கப்படாமல் அதே நிலையில் தொடர வேண்டும் அல்லது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ஆதரவு அரசியல் பாகுபாடுகளை தாண்டி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. வலதுசாரி கருத்துகளை கொண்டவர்களிடையிலும் பெரும்பான்மையானோர் இந்த உதவித் தொகையை குறைப்பதை எதிர்க்கின்றனர்.

மேலும், வறுமை அதிகமாக உள்ள பிராந்தியங்களுக்கு வழங்கப்படும் உதவியை குறைத்து, உக்ரைனுக்கான ஆதரவை அதிகரிப்பதையும் பலர் எதிர்க்கின்றனர். குறிப்பாக, சஹாரா தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளுக்கான நிதியை குறைப்பதை சுமார் பாதி பேர் நிராகரித்துள்ளனர்.
இதேவேளை, சுவிட்சர்லாந்து பாராளுமன்றம் 2025 முதல் 2028 வரை உள்ள காலத்திற்கு சுமார் 11 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் அளவிலான வளர்ச்சி உதவித் திட்டத்தை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இது ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவானதாகும்.
இந்த முடிவுகள், உலகளாவிய மனிதாபிமான உதவிகளில் சமநிலையை பேண வேண்டும் என்ற சுவிஸ் மக்களின் எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.





