குழந்தை மீது தாக்குதல் நடத்திய நபர் : போலீசாரால் கைது
குழந்தை மீது தாக்குதல் நடத்திய நபர் : போலீசாரால் கைது
குழந்தை மீது தாக்குதல் நடத்திய நபர் : போலீசாரால் கைது! கன்டோன் கிறாவுன்டனில்நவம்பர் 13, 2024 புதன்கிழமை அன்று, பேருந்து நிறுத்தத்தில் Samnaun (சாம்னானில்) ஒரு குழப்பமான சம்பவம் நடந்தது.
ஒரு நபர் ஒரு குழந்தையை தாக்கி அக்குழந்தை காயங்களுக்கு உள்ளாகியிருந்தது. இத்தாக்குதல் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.
52 வயதுடைய நபர் ஒருவர் Samnaun இல் உள்ள Musella பேருந்து நிலையத்திற்குச் சென்று திடீரென ஒரு குழந்தையைத் தாக்கி, தெரியாத பொருளால் தலையில் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் வீடு திரும்பினார் மற்றும் வாக்குமூலம் அளிக்க போலீஸை அழைத்தார். காயமடைந்த குழந்தையை அப்பகுதி மக்கள் அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.
பின்னர், காயங்களின் தீவிரம் காரணமாக ரேகா ஹெலிகாப்டர் குழந்தையை Chur ல் உள்ள பிரதான மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
காலை 11:30 மணியளவில், போலீசார் எந்த பிரச்சனையும் இல்லாமல் அந்த நபரை கைது செய்தனர். அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் குற்றவியல் விசாரணை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





