பேர்ன்னில் இரண்டு ஆண்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை
பேர்ன்னில் இரண்டு ஆண்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை
பேர்ன்னில் இரண்டு ஆண்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை பெர்னில், புதன்கிழமை அதிகாலை, பெரன்பார்க் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு பெண் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
Klösterlistutz என்ற பொது பார்க்கிங் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு பேரும் அந்தப் பெண்ணை அணுகி, அவளை மிரட்டி, பின்னர் தாக்கத் தொடங்கினர்.
அதிர்ஷ்டவசமாக, ஒரு வழிப்போக்கர் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு, அவளுக்கு உதவ எண்ணி விரைவாக போலீசாரை அழைத்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டவுடன் தாக்குதல் தாரிகள் தப்பியோடியுள்ளனர்.

பேர்ன் கன்டோனல் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(c) Bern Kantonal Polizei





