Swiss News In Tamil

சூரிக்கில் டிராபிக் ரேடர்களை சேதப்படுத்திய நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

சூரிக்கில் டிராபிக் ரேடர்களை சேதப்படுத்திய நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

சூரிக்கில் டிராபிக் ரேடர்களை சேதப்படுத்திய நபருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

சூரிக் (Zürich) நகரில் போக்குவரத்து வேகக் கண்காணிப்பு ரேடர்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகளை தொடர்ந்து சேதப்படுத்திய 52 வயது சுவிஸ் நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில் சூரிக் நகரில் அமைந்திருந்த குறைந்தது 40 ரேடர்கள் மற்றும் போக்குவரத்து கண்காணிப்பு கருவிகளை வண்ணப்பூச்சு தெளித்து செயலிழக்கச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு சூரிக் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அவர், “நான் தவறுகள் செய்தேன். அதனால்தான் இன்று இங்கு நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “இனிமேல் வாழ்க்கையின் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

N5

ஆனால், ஏன் இப்படியான செயல்களில் ஈடுபட்டார் என்பதற்கான தெளிவான காரணத்தை அவர் விளக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனநல மருத்துவ அறிக்கையிலும் இதற்கான உறுதியான உந்துதல் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவு நடைமுறையின் கீழ் விசாரிக்கப்பட்டதால், முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட தண்டனையை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இதேநபர் இதற்கு முன்பும் இதேபோன்ற சம்பவங்களில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு, டீடிகோன் (Dietikon) மாவட்ட நீதிமன்றம், ஒரு ரேடரை சுத்தியலும் கட்டுமான நுரையும் பயன்படுத்தி சேதப்படுத்திய வழக்கில் அவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

அப்போது அரசுத் தரப்பு கூறியதன்படி, அரசு மற்றும் போலீசாரின் மீது இருந்த விரக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் அவர் இந்த செயல்களை செய்ததாக கூறப்பட்டது.

மேலும், 2019 ஆம் ஆண்டில் பொது அதிகாரியை போல நடித்து போக்குவரத்தை கட்டுப்படுத்தியதற்காகவும் அவர் தண்டிக்கப்பட்டிருந்தார். நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துக்குப் பிறகு, தீயணைப்பு படை ஜாக்கெட்டை அணிந்து ஒளி கம்பியைப் பயன்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முயன்றதாகவும், தனது காரில் ஆரஞ்சு எச்சரிக்கை விளக்கையும் பொருத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரம் மற்றும் முந்தைய குற்றப் பதிவுகளை கருத்தில் கொண்டால் நிபந்தனைத் தண்டனை வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தண்டனையை அனுபவிப்பதற்கு முன் குற்றவாளி கட்டாய மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  © Keystone

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button