லுசேர்ன் கன்டோனில் மூடப்படும் காவல்நிலையங்கள்.!!!
லுசேர்ன் கன்டோனில் மூடப்படும் காவல்நிலையங்கள்.!!!

லுசேர்ன் கன்டோனில் மூடப்படும் காவல்நிலையங்கள்.!!!
சுவிட்சர்லாந்தின் லூசேர்ன் கன்டோனில் (Kanton Luzern) அமைந்துள்ள சில காவல் நிலையங்கள் எதிர்வரும் வாரத்தின் தொடக்கத்தில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக லூசேர்ன் கன்டோனல் காவல் துறை அறிவித்துள்ளது.
தற்போது புர்கென்ஸ்டொக் (Bürgenstock) பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த உயர்மட்ட நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் லூசேர்ன் கன்டோனல் காவல் துறையும் பங்கேற்று வருவதால், சில காவல் நிலையங்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 2026 ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் சில காவல் நிலையங்களின் நேரடி அலுவலகச் சேவைகள் மட்டுமே பாதிக்கப்படும். இருப்பினும், காவல்துறையின் அவசர சேவை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழக்கம்போல தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லூசேர்ன் கன்டோனின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் குறைந்தது ஒரு காவல் நிலையம் திறந்தே இருக்கும். எனவே காவல்துறையின் செயல்திறன் அல்லது அவசர நடவடிக்கை திறனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பல்வேறு புகார்களை இணையம் வழியாக பதிவு செய்வதற்காக Suisse ePolice சேவையையும் பயன்படுத்தலாம். அவசர சூழ்நிலைகளில் வழக்கம்போல 117 என்ற அவசர இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.
ஜூன் 22 முதல் 26 வரை தினமும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் பிற்பகல் 1.30 மணி முதல் 5.00 மணி வரை எபிகோன் (Ebikon), எம்மென் (Emmen), ஹொக்டோர்ஃப் (Hochdorf), கிரியன்ஸ் (Kriens), லூசேர்ன் (Luzern) ஹிர்ஷெங்க்ராபன் 17a, ஷூப்ஃப்ஹைம் (Schüpfheim), சுர்சே (Sursee) மற்றும் வில்லிசாவ் (Willisau) ஆகிய காவல் நிலையங்கள் திறந்திருக்கும்.
இந்த தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள லூசேர்ன் கன்டோனல் காவல் துறை, மக்களின் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளது.





