சுவிட்சர்லாந்தின் 800 மில்லியன் பிராங்க் உபரி நிதி… இராணுவத்திற்கா? காலநிலை பாதுகாப்பிற்கா?
சுவிட்சர்லாந்தின் 800 மில்லியன் பிராங்க் உபரி நிதி… இராணுவத்திற்கா? காலநிலை பாதுகாப்பிற்கா?

சுவிட்சர்லாந்தின் 800 மில்லியன் பிராங்க் உபரி நிதி… இராணுவத்திற்கா? காலநிலை பாதுகாப்பிற்கா?
இந்த விவகாரம் தற்போது சுவிஸ் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு சுமார் 700 மில்லியன் பிராங்க் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டாட்சி அரசாங்கம் தற்போது சுமார் 800 மில்லியன் பிராங்க் உபரியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்த வரி வருவாயே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த உபரி நிதியை சுவிஸ் இராணுவத்தை நவீனமயமாக்கவும், குறிப்பாக வான் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிஃபிஸ்டர் வலியுறுத்துகிறார்.
கூட்டாட்சி மன்றத்தின் திட்டப்படி, இராணுவத்திற்கு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பிராங்க் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.
ஆனால் இந்தத் திட்டத்திற்கு இடதுசாரி மற்றும் பசுமைக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காலநிலை நெருக்கடி, அதிகரிக்கும் வெப்பம் மற்றும் வறட்சி போன்ற பிரச்சினைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உபரி நிதியை இராணுவத்திற்கு பதிலாக காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்களை அதிக வெப்பத்தை சமாளிக்கும் வகையில் மாற்றவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீடு செய்யவும் நிதி ஒதுக்க வேண்டும் என SP கட்சியின் இணைத் தலைவர் மட்டியா மேயர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், வலதுசாரி SVP கட்சி இராணுவத்திற்கான கூடுதல் நிதியை ஆதரிக்கிறது.
இதனால், சுவிட்சர்லாந்தின் உபரி நிதி பாதுகாப்பிற்கா அல்லது காலநிலை பாதுகாப்பிற்கா என்ற அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
இறுதியில் இந்த 800 மில்லியன் பிராங்க் எங்கு செல்கிறது என்பது நாடாளுமன்ற முடிவில் தெரியவரும்.





