“வின்டர்தூரில் பரபரப்பு! டிராக்டரில் இருந்து பிரிந்த டிரெய்லர்… சாலையில் சிதறிய கழிவுகள்!
"வின்டர்தூரில் பரபரப்பு! டிராக்டரில் இருந்து பிரிந்த டிரெய்லர்… சாலையில் சிதறிய கழிவுகள்!

வின்டர்தூரில் டிராக்டர் விபத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை, கட்டுமானக் கழிவுகள் ஏற்றப்பட்ட டிரெய்லருடன் ஒரு டிராக்டர் ஸியூஹாஸ்ஸ்ட்ராஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது.
மாலை 4.30 மணிக்குப் பிறகு, ஸியூஹாஸ்ஸ்ட்ராஸ் மற்றும் வில்ட்பாக்ஸ்ட்ராஸ் சந்திப்பில் எதிர்பாராத விதமாக டிரெய்லர் டிராக்டரில் இருந்து கழன்று கவிழ்ந்தது.
இதனால் டிரெய்லரில் இருந்த கட்டுமானக் கழிவுகள் அனைத்தும் சாலை முழுவதும் சிதறின.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி சில நேரம் போக்குவரத்துக்காக மூடப்பட்டது. பின்னர் சுத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் சாலை திறக்கப்பட்டது.
விபத்தில் டிரெய்லருக்கு சேதம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 40 வயதான ஓட்டுநரை பரிசோதனை செய்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததாக வின்டர்தூர் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
டிரெய்லர் எப்படி டிராக்டரில் இருந்து பிரிந்தது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
இந்த விபத்து தொடர்பாக வின்டர்தூர் நகர காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
சாலையில் வாகனம் ஓட்டும்போது சிறிய கவனக்குறைவு கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.





