ஈரான் போர் நீடித்தால் சுவிட்சர்லாந்தில் மின்சார விலை உயர்வு அபாயம்
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பதற்றம் மற்றும் Iran தொடர்பான மோதல்கள் காரணமாக, சுவிட்சர்லாந்தில் இந்த குளிர்காலத்தில் மின்சார பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த மோதலால் வாகனங்கள் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. இந்நிலையில் Strait of Hormuz கடல்சந்தி நீண்ட காலத்திற்கு மறிக்கப்பட்டால், திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோகத்தில் கடும் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Federal Electricity Commission (Elcom) வெள்ளிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கையில், “மிக மோசமான சூழ்நிலையில்” எரிவாயு பற்றாக்குறை ஐரோப்பா மற்றும் சுவிட்சர்லாந்தின் மின்சார விநியோக நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தனது எரிவாயு தேவைகளுக்காக ஐரோப்பிய சேமிப்பு அமைப்புகளை பெரிதும் நம்பியுள்ள நிலையில், தற்போதைய எரிவாயு சேமிப்பு அளவுகள் ஏற்கனவே குறைவாக உள்ளதாக Elcom தெரிவித்துள்ளது.
மேலும், அந்த சேமிப்புகள் எப்போது அல்லது எவ்வாறு மீண்டும் நிரப்பப்படும் என்பது குறித்து உறுதியற்ற நிலை காணப்படுவதால், குளிர்காலத்தில் மின்சார சந்தையில் கூடுதல் அழுத்தம் உருவாகக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.