Swiss News In Tamil

சூரிச்சில் வெளிநாட்டவர்களின் வருகையால் அதிகூடிய சனத்தொகை பதிவு

வெளிநாட்டவர்களின் வருகையால் சூரிச் நகரின் சனத்தொகை உச்சத்தை தொட்டுள்ளது.

சூரிச் மாகாணத்தில் கடந்த வாரம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1.6 மில்லியன் மக்கள் பதிவு செய்த பிறகு, நகரத்தில் இதுவரை பதிவுசெய்யப்படாத அதிகூடிய மக்கள் தொகை இதுவென தெரிவிக்கப்படுகிறது.

மொத்தத்தில், கிட்டத்தட்ட 450,000 மக்கள் இப்போது சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் வாழ்கின்றனர், 2022 முதல் 4,045 பேர் சூரிச்சிற்குச் புதிதாக வந்துள்ளனர்.

henrique ferreira 6p I X sPUY unsplash min 1 scaled 1

இந்த அதிகரிப்பு பெரும்பாலும் குடியேற்றம் காரணமாக இருப்பதாக நகராட்சி புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​சூரிச்சில் வெறும் 150,000 வெளிநாட்டுப் பிரஜைகள் வசிக்கின்றனர். இது சூரிச்சில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 33.6 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button