சுவிட்சர்லாந்தில் தேவையான அளவு பெற்றோல் மற்றும் எரிபொருட்கள் உள்ளதாக அரசு தகவல்
எண்ணெய் கையிருப்பை வெளியிட சுவிட்சர்லாந்துக்கு தற்போது சட்ட அடிப்படை இல்லை
உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைநிறுத்த உறுப்புநாடுகள் தங்களின் கையிருப்பு எண்ணெயை வெளியிட வேண்டும் என்று International Energy Agency (IEA) அழைப்பு விடுத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து தற்போது அதற்கு நேரடியாக பதிலளிக்க முடியாது என்று Guy Parmelin தெரிவித்துள்ளார்.
பொருளாதார அமைச்சராகவும் உள்ள அவர் கூறுகையில், நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் அரசாங்கம் அவசர கையிருப்புகளை வெளியிட முடியும். தற்போதைய சூழ்நிலையில் அத்தகைய அவசர நிலை இல்லாததால் சட்ட ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் விளக்கினார்.

இருப்பினும் சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் நோக்கில் அவசர கையிருப்புகளை வெளியிடுவது கோட்பாடாக சாத்தியமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. IEA சமீபத்தில் உலக சந்தையை நிலைநிறுத்த 400 மில்லியன் பேரல் மூல (Crude Oil)”எண்ணெயை வெளியிட முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் கட்டாயமாக வைத்திருக்கும் எரிபொருள் கையிருப்புகள் நாட்டின் தேவைக்கு சுமார் 4.5 மாதங்களுக்கு போதுமானதாக உள்ளன. இதில் சுமார் 14.5 மில்லியன் பேரல் பெட்ரோல் மற்றும் டீசல், 8.6 மில்லியன் பேரல் வெப்பமூட்டும் எண்ணெய் மற்றும் 2.4 மில்லியன் பேரல் விமான எரிபொருள் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் அவசர தேவைக்காக கட்டாய எண்ணெய் கையிருப்புகள் வைத்திருக்கப்படுகின்றன. அரசு தகவலின்படி, இந்த கையிருப்புகளை எண்ணெய் தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிறுவனங்களே பராமரித்து வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்கள் நாட்டின் தேவைக்கு சுமார் 4.5 மாதங்களுக்கு போதுமான அளவில் கையிருப்பாக உள்ளன. விமான எரிபொருளுக்கான கையிருப்பு மூன்று மாத தேவையை பூர்த்தி செய்யும் அளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் சுமார் 14.5 மில்லியன் பேரல் பெட்ரோல் மற்றும் டீசல், 8.6 மில்லியன் பேரல் வெப்பமூட்டும் எண்ணெய் மற்றும் 2.4 மில்லியன் பேரல் விமான எரிபொருள் கையிருப்பாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
© SwissInfo





