வாட் கன்டோன் பண்ணையில் தீ விபத்து 30 கால்நடைகள் பலி.!!
வாட் கன்டோன் பண்ணையில் தீ விபத்து 30 கால்நடைகள் பலி.!! நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாட் மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 கால்நடைகள் இறந்தன. இரண்டு பேர் லேசான காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் தீயணைப்பு வீரர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட் மாகாணத்தில் உள்ள Peney-le-Jorat இல் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் இரவில் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்பு பகுதி, தொழுவம் மற்றும் கொட்டகையுடன் கூடிய கட்டிடம் தீயில் எரிந்து நாசமானது.

தீ ஏன் ஏற்பட்டது என்று முதலில் தெரியவில்லை. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையை தொடங்கியது.
கடும் புகை மூட்டத்தால் அக்கம் பக்கத்து வீடுகளை விட்டு அயலவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. 68 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. (c) sda





