Swiss News In Tamil

சூரிச் ஏரியில் டீசல் எண்ணெய் கசிவு கண்டுபிடிப்பு : அதிகாரிகள் தீவிர விசாரணை

சூரிச் ஏரியில் டீசல் எண்ணெய் கசிவு கண்டுபிடிப்பு : அதிகாரிகள் தீவிர விசாரணை

2025 ஜூன் 22 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, சூரிச் ஏரியின் மேல்பரப்பில் டீசல் எண்ணெய் கலந்திருப்பதைப் பல பொதுமக்கள் கவனித்து, இதை செயின்ட் காலென் மாநில அவசர சேவைக்கு அறிவித்தனர். தற்போது இந்த எண்ணெய் கசியலுக்கான காரணம் என்ன என்பது பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

முதல் முறை சனிக்கிழமை மாலை 8:15 மணியளவில் அவசர அழைப்பு வந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை, எண்ணெய் பரவுவதைத் தடுக்க “ஓயில் ஸ்பெர்ரன்” ( Ölsperren) எனப்படும் எண்ணெய் தடுப்பு கருவிகளை அமைத்தது. மேலும், ஏரியின் மேல்பரப்பிலிருந்து எண்ணெய் கலப்பை அளவுக்கேற்ப நீக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.

Symbolbild Wasserprobe 4

இரண்டாவது முறையாக, ஞாயிற்றுக்கிழமை, முதல் இடத்துக்கு அருகே மேலும் பெரிதாக டீசல் எண்ணெய் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எண்ணெய் பரவலை கட்டுப்படுத்தினர் மற்றும் சுத்தம் செய்தனர்.

இந்த இரட்டை சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணம் தற்போதும் தெரியவில்லை. இது தொடர்பாக செயின்ட் காலென் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட தீயணைப்புத் துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவும் இந்த பணிகளில் பங்கேற்றுள்ளது.

இந்தச் சம்பவம், இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கிடையே எவ்வளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. பொதுமக்கள் இதுபோன்ற சூழ்நிலை மாசுகளைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

@Kapo SG

Related Articles

Back to top button