தலை சுற்ற வைக்கும் சுவிசின் வித்தியாசமான சட்டங்கள்…
தலை சுற்ற வைக்கும் சுவிசின் வித்தியாசமான சட்டங்கள்...


சரி வாங்க விடயம் தெரியாமல் சுவிசில் மாட்டிக்கொண்ட சிலர் அபராதம் செலுத்திய சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.
ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் ஷாஃப்ஹவுசனில் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது விழுந்து விலா எலும்பு முறிந்தார். இருப்பினும், அவர் அடைந்த காயங்களுக்கு அனுதாபத்திற்குப் பதிலாகஇ கன்டோனல் அதிகாரிகள் அந்த நபரை “தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்காக” 150 ஃபிராங்க் அபராதம் விதித்தனர். அவர் விழுந்ததால் ஷாஃப்ஹவுசனின் குடியிருப்பாளர்கள் அல்லது உள்கட்டமைப்புக்கு சேதம் அல்ல. ஆனால் அவர் அபராதத்தை செலுத்த மறுத்ததால், அந்த சுற்றுலா பயணிக்கு இரண்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த அந்த சுற்றுலாப்பயணி சுவிட்சர்லாந்து சுற்றுலாவுக்கு சரிபட்டுவராது என்பது போல கருத்து தெரிவித்திருந்தார்.
சுவிசில் வேகமாக கார் ஓட்டினால் கடுமையான அபராதம் விதித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் மெதுவாக கார் ஓட்டியதற்காக ஒரு வயோதிபர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா.? செங்குத்தான மலைப்பாதையில் காரை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றதாக 66 வயது ஓட்டுநரை பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குத்தானஇ மலைப்பாதையில் இருந்து குறித்த கார் கீழே வரும் வரை காத்திருந்த போலீசார் அவர் கீழே இறங்கியதும்இ மிக மெதுவாக வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு 780 பிராங்க் அபராதம் விதித்தனர். இதைப்பார்த்து குழம்பிப்போன முதியவர் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரியவருகின்றது. இதுபற்றி குறிப்பிட்ட அவர் “இந்த உலகில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை” என்று பெர்ன்னில் உள்ள அந்த குடியிருப்பாளர் கருத்து தெரிவித்தார் .
ஒரு நிமிடம் தாமதமாக ரயில் டிக்கெட் வாங்கியதற்காக ஓய்வூதியதாரர் ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஜனவரியில் இடம்பெற்றுள்ளது. 72 வயதான இவர், ஆர்காவ் மாகாணத்தில் உள்ள லென்ஸ்பர்க்கிலிருந்து ஹன்சென்ச்வில் வரை ரயிலில் சென்றார். அவர் ஏறும் முன் ஆன்லைனில் டிக்கெட் வாங்க விரும்பினார், “அவர் முகமூடி இணிந்திருந்மையினால் தொலைபேசி முதலில் என்னை அடையாளம் காணவில்லை, பின்னர் எனது கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்திருந்தது இதனால் நேரவிரயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.
ரயில் புறப்பட்ட ஒன்றரை நிமிடத்திற்குப் பிறகே அவரால் பயணச்சீட்டை ஆன்லைனில் வாங்கமுடிந்தது. ஆனால் அவரது டிக்கெட்டை சரிபார்த்த பிறகு, அந்த நபர் ரயிலில் ஏறுவதற்கு முன் கட்டணத்தை செலுத்தாததற்காக 90 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டார்.
அவர் 57 ஆண்டுகளாக சுவிஸ் ஃபெடரல் ரயில்வேயின் (SBB விசுவாசமான வாடிக்கையாளராகவும், சீசன் டிக்கெட் வைத்திருப்பவராகவும் இருப்பதால் நிலைமை மேலும் முரண்பாடான ஒன்றாக மாறியது. இருப்பினும் ஓய்வூதியம் பெறுபவர் இந்த சம்பவத்தை ஒரு நல்ல முன்னேற்றமாக எடுத்துக் கொண்டார்.
சைக்கிள் ஓட்டிகள் சைக்கிள் பெடலில் இருந்து காலை எடுத்தால் 20 பிராங் அபரதம் விதிக்கப்படுகிறது. இப்படியொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பான சைக்கிள் ஓட்டுதலின் நலன்களுக்காக, சைக்கிள் ஓட்டுபவர்கள் எப்போதும் தங்கள் கால்களை பெடல்களில் வைத்திருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களுக்கு ஊர்கு 20 அபராதம் விதிக்கப்படும் . மணி அடிக்கத் தவறினாலும் அபராதமும் விதிக்கப்படலாம். நீங்கள் மின்-பைக்கில் இருந்தால், எல்லா நேரங்களிலும் உங்கள் விளக்குகளை எரியவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் – இது பகலில் கூட இடம்பெறலாம் எனவே கொஞ்சம் கவனமாகவே சைக்கிள் ஓட்டுங்கள்..






