Saturday, 19 September 2026
Swiss News In Tamil

சூரிச் விமானநிலையத்தில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

சூரிச் கன்டோனல் போலீசார் நேற்று திங்கள்கிழமை சூரிச் விமான நிலையத்தில் இருவரைக் கைது செய்து ஒரு கிலோகிராம் கோகோயினை கைப்பற்றினர்.

74 வயதான ஹங்கேரிய நபர் ஒருவர் திங்கள்கிழமை காலை பிரேசிலில் இருந்து சூரிச் வழியாக பாரிசுக்கு பயணம் செய்தார்.

சூரிச்
சூரிச் கன்டோனல் பொலிஸாரின் லக்கேஜ் சோதனையின் போதுஇ ​​அவரது பயணப் பையில் சுமார் 500 கிராம் கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மயக்க மருந்து அவரது ஆடையில் வைத்து தைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்று 30 வயதான பிரேசிலிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பிரேசிலில் இருந்து சூரிச் வழியாக மல்லோர்காவுக்கு போதைப்பொருளைக் கடத்த முயன்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.